TNPSC-LOGO

TNPSC Group 2 and 2A Exam Hall ticket 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மூலம் 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 20ஆம் தேதி வெளியாகி இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 19ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

TNPSC Group 2 and 2A Prelims Exam Date 2024 Hall ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த முறை நடத்த தேர்வில் எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு கிடையாது. ஆனால் இந்தாண்டு குரூப் 2 -வில் துணை வணிகவரி அலுவலர் பதவிக்கு அதிகபட்சமாக வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட வனவர் பதவிக்கு அதிகபட்ச வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டியவை :
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செப்டம்பர் 14-ம் தேதி காலை 8.30 மணிக்கு வர வேண்டும். காலை 9.00 மணி வரைக்கு சலுகை நேரம் வழங்கப்படும். 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும்.
அனைத்து தேர்வர்களும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். சலுகை நேரத்திற்குப் பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும், தவறினால் தேர்வர், தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார். தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தரக்கணக்கு அட்டை(PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து. அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும். தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
நன்றி samayam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *