IBPS

IBPS PO, SO 2024 Last date : பொதுத்துறை வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 4,455 துணை மேலாளர் (Probationary Officer) பணியிடங்கள் மற்றும் 896 சிறப்பு அதிகாரி Scale I பணியிடங்களை தேர்வில் மூலம் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

IBPS PO, SO 2024 Apply Online : இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் 4,455 துணை மேலாளர் (Probationary Officer) பணியிடங்கள் மற்றும் 896 சிறப்பு அதிகாரி Scale I பணியிடங்களை தேர்வின் மூலம் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க பெறப்பட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் ஆன்லைன் விண்ணப்பம் முடிவடைகிறது.

IBPS Specialist Officer/Probationary Officer 2024 காலிப்பணியிடம் விவரங்கள் :
ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பதவிக்கு பேங்க் ஆஃப் இந்தியா – 15, கனரா வங்கி – 5, இந்திய ஓவர்சீஸ் வங்கி – 40, பஞ்சாப் தேசிய வங்கி – 800, யுசிஒ வங்கி – 36 என மொத்த 896 காலிப்பணியிடங்கள் மற்றும் துணை மேலாளர் பதவிக்கு, இந்தியா வங்கி – 885, கனரா வங்கி – 750, மத்திய வங்கி – 2000, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 260, பஞ்சாப் தேசிய வங்கி – 200, பஞ்சாப் & சிந்து வங்கி – 360 4,455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு :
பொதுத்துறை வங்கி துணை மேலாளர் பதவிக்கு 01.08.2024 ஆம் தேதியின் படி, குறைந்தபட்சம் 20 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.08.1994 ஆம் தேதி முதல் 01.08.2004 ஆம் தேதி வரை பிறந்திருக்க வேண்டும்.
மேலும் கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

எவ்வளவு சம்பளம்?
வங்கி துணை மேலாளர் பதவிக்கு குறைந்தபட்ச ரூ.52,000 முதல் சம்பளமாக வழங்கப்படும். சிறப்பு அதிகாரி Scale 1 பதவிக்கு, குறைந்தபட்சம் ரூ.23,700 முதல் அதிகபடியாக ரூ.42,020 வரை வழங்கப்படும். மாதம் ரூ.36,400 கையில் கிடைக்கும்.

கல்வித்தகுதி :
துணை மேலாளர் பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். சிறப்பு அதிகாரி பதவிக்கு துறை சார்ந்த விரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

பொதுத்துறை வங்கி துணை மேலாளர் பதவிக்கு முதல்நிலை தேர்வு (Preliminary Examination), முதன்மை தேர்வு (Main Examination) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும். தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும்.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதன்மை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். அதனைத்தொடர்ந்து, பணியிடங்களுக்கு ஏற்று தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேர்வு மற்றும் நேர்காணலில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
வங்கி துணை மேலாளர்/ சிறப்பு அதிகாரி பதவிக்கு https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.175 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் விண்ணப்பக் கால அவகாசம் முடிவடையும் நிலையில், உடனடியாக மேல் குறிப்பிட்ட இணையத்தளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும். துணை மேலாளர் பதவிக்கு அக்டோபர் 2024 நடைபெறும். சிறப்பு அதிகாரி பதவிக்கு முதல்நிலை தேர்வு நவம்பர் 2024 நடைபெறும்.
 
நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *