jobfair

TN Govt Tirupathur Mega Job Fair 2024 : தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தனியார் துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு தகுதிகேற்று கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் 18-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் வேலைவாய்ப்பற்றவர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Mega Job Fair 2024 in Tirupathur : தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மூலம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், நாளை (18.10.2024) திருப்பூத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலையை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முன்னணி நிறுவனங்களில் வேலை :

திருப்பத்தூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 18.10. 2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள தகுதிகள் :

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தகுதிகேற்ற பணிகள் இந்த முகாமின் மூலம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *