லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான மோதல் தீவிரமாகியுள்ளது.

லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள தஹியே பகுதியில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டது. பதிலடியாக, வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹெஸ்பொலா அதிகளவிலான ராக்கெட்டுகளை ஏவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *