அண்மையில், அமெரிக்காவில் (Memorial Sloan Kettering Cancer Center, New York, USA) மலக்குடல்ப்புற்று (Rectal Cancer) நோயினால் பாதிக்கப்பட்ட பதினான்கு நோயாளிகளுக்கு dostarlimab-gxly என்னும் நோயெதிர்ப்பி மருந்திணைமம் (சோதனைக்காக) செலுத்தப்பட்டது. (N. Engl. J. Med. 2022, 386, pp 2363; DOI: 10.1056/NEJMoa2201445). இந்தச் சோதனையில், பதினான்கு நோயாளிகளும் 100% மலக்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். புற்றுநோய் மருந்தாக்கத்துறையில் இதுவொரு பெருஞ்சாதனை என்பதோடு, வெவ்வேறு வகைப் புற்றுநோய்களுக்கும் நோயெதிர்ப்பி மருந்திணைம முறையில் மருந்தாக்கலாம் என்ற நம்பிக்கையை அறிவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புற்றுநோய்களுக்கு முடிவு கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.
(முனைவர் செ. அன்புச்செல்வன், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர்புதூரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயிர்க்கனிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகம், போர்ச்சுகல்-இலிசுபன், இங்கிலாந்து-பர்மிங்காம் மற்றும் ஹல் பல்கலைக்கழகங்களில் புற்றுநோய் மருந்தாக்கம் மற்றும் MRI வேதியியலில் முதுமுனைவராகப் பணியாற்றியவர். ஐரோப்பிய ஆணையத்தால் வழங்கப்பெறும் மேரி-கியூரி முதுமுனைவு ஆராய்ச்சி விருதாளராகிய இவர் தற்போது பிரித்தானியாவில் Antibody Drug Conjugate Cancer Therapeutics துறையில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.)