job fair

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான் கல்லூரியில் நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (செப்.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாளையங்கோட்டை ஜான் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படுகின்றன. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்குப் பதிவு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படுகின்றன.

இதற்கு 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ நர்சிங்/ பார்மஸி, பொறியியல் படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462 2902248 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
.நன்றி  news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *