baby

பாலத்தின் அடியில் கிடந்த குப்பை கவர்… உள்ளே பச்சிளம் குழந்தையின் உடல் – மதுரையில் பரபரப்பு மதுரை மாவட்டம், யானைக்கல் தரைப்பாலத்தின், அருகே பச்சிளம் குழந்தை குப்பை கவரில் சுற்றப்பட்டு கிடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண் சிசுவை மீட்டனர். சிசுவின் தொப்புள் பகுதியில், மருத்துவமனை கருவி பொருத்தப்பட்டிருந்தது. பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளதா இல்லை வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து பிறந்த குழந்தயை, கொலை செய்து தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நன்றி Thanthi TV 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *