vck

‘விசிக’ நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் ‘அதிமுக’ விற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க `அதிமுக’ விற்கு அழைப்பு விடுத்திருகிறார் விசிக தலைவர் திருமாவளவன். இது ‘விசிக’வின் தேர்தல் அரசியலுக்கான யுக்தியா? மக்களுக்கான நலனா? என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் ‘விசிக’ தலைவர் திருமாவளவன், “இந்த மது ஒழிப்பு மாநாடு தேர்தலை குறிவைக்கும் யுக்தியல்ல. இது தேர்தலுக்கான மாநாடு அல்ல, மக்களுக்கான மாநாடு. அதிமுக இந்த மாநாட்டில் தாராளமாகப் பங்கேற்கலாம். மதவாத – சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்று இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம். காரணம்; மது போதையை விடக் கொடியது மதவாத, சாதிய போதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *