பாராலிம்பிக் 2024பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ

இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருக்கின்றனர். இந்தியா சார்பில் 34 பெண்கள் உள்பட 84 பேர் பங்கேற்று இருக்கின்றனர். இதில் பெண்களுக்கான பேட்மிட்டன் ஒன்றையர் பிரிவில் SU5 பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தி இருந்தனர்.

சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைப் படைத்த அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பேட்மிண்டனில் SH6 பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யா ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருக்கிறார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் நித்யா ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *