prize

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் “தி சென்னை க்விஸ்” போட்டியில் முதல் பரிசு வெல்லும் அணிக்கு ரூ.7ஆயிரம்  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு அணிகள் பதிவு செய்யலாம். சென்னை திருக்குறள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி 6, 7, 8, 9ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. அவை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தும் ’சென்னை பள்ளி’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.7ஆயிரம், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5ஆயிரம், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள்அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள் https://forms.gle/CiU1WvgQ9jYwkbhn7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

நன்றி indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *