Social Work Jobs| சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணபிக்க தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி சிவகாசி மாநகராட்சியில் 3 சமுதாய அமைப்பாளர் பணியிடமும், அருப்புக்கோட்டை நகராட்சி, இராஜபாளையம் நகராட்சி, விருதுநகர் நகராட்சி, திருவில்லிபுத்தூர் நகராட்சி, சேத்தூர் மற்றும் செட்டியார் பட்டி பேரூராட்சிகளில் தலா 1 சமுதாய அமைப்பாளர் பணியிடமும் காலியாக உள்ளது.

தகுதிகள்:  பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணபிக்க தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏதேனும் இளங்கலை படத்துடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் , 05.08.2024 அன்றைய நிலவரப்படி 35 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருடம் களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ALF எனப்படும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மகளிர் குழுக்கள் சம்பந்தப்பட்ட அலுவல்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்க கூடாது.  இதற்கான விண்ணப்பத்தை வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும், www.virudhunagar.nic.in என்ற வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபத்தை வரும் 05.09.2024 மாலை 5.45 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மேலாளர், நகர்புற வாழ்வாதார இயக்கம் CLC, இராஜபாளையம் நகராட்சி, செல் : 8344543852 email:clcrjpm21@rjpm

 

நன்றி news18

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *