கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரின் அற்புதமான பேட்டிங்கால், இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி மூலம் இந்திய அணி கணக்குத் தீர்த்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *