திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பகுதி, ஓ.எம்.ஆர் சாலையில், புதிய பர்னிச்சர் கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், இரவு காவலாளியாக ராமர் என்பவர் பணியில் சேர்ந்தார். ஆனால் மறுநாள் காலை வரை கடை திறக்கப்படாததால், கட்டிட உரிமையாளர் சந்தேகம் அடைந்து, மூன்றாவது மாடியில் ஏறி பார்த்த போது, மொட்டை மாடியின் கதவு திறந்து கிடந்தது. அந்த வழியாக உள்ளே இறங்கிப் பார்த்த போது இரண்டாவது தளத்தில், செக்யூரிட்டி ராமர் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவலாளியுடன் இருந்த அசோக் தலைமறைவாகியுள்ளார். திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், டைனிங் டேபிள் கட்டையால் ராமர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *