ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது. புனேவில் இருந்து கோவை நோக்கி பேட்டரி லோடுகளை ஏற்றுக்கொண்டு வந்த லாரி, பத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, லாரியின் டீசல் டேங்க் வெடித்ததாக கூறப்படுகிறது. லாரியிலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்றியதை பார்த்ததும், ஓட்டுநர் ஏழுமலை, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு உயிர் தப்பினார். லாரியில் பற்றிய தீயை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். லாரி மற்றும் அதிலிருந்த பேட்டரிகள் சேதமடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி Thanthi TV 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *