crocordile

வலையில் சிக்கிய 100 கிலோ…அதிர்ச்சியில் வாய் பிளந்த மக்கள் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, குளத்தில் மீன்பிடிக்க வீசிய வலையில், சுமார் 100 கிலோ எடையுள்ள முதலை, இறந்த நிலையில் சிக்கியது.கோதண்டவிளாகம் கிராமத்தில் உள்ள குளத்தில், மீன் பிடிக்க சிலர் வலை வீசினர். அப்போது சுமார் 100 கிலோ எடையுள்ள முதலை அந்த வலையில் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். முதலை அசைவற்ற நிலையில் இருந்ததால், அது குளத்திலேயே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குளத்தில் ஓரிரு முதலைகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குளத்தைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதுடன், சிறுவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் உரிய ஆய்வு செய்து, குளத்தில் இருக்கும் முதலைகளைப் பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *