Mission Vatsalya Assistant Jobs | ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மிசன் வத்சால்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்கண்ட பட்டியலில் உள்ள 1 காலியிடப்பணியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உதவியாளருடன் இணைந்த கணினிஇயக்குபவர் (Assistant Cum Data Entry operator)காலிப்பணியிடங்கள் 1 ஆகும். மாதம் ஊதியம் 13,240/- ஒப்பந்தம் அடிப்படையில் ஆகும்.

கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ விபரம்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

https://pudukkottai.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 20.09.2024 அன்று மாலை 5.30 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை – 622002 தொலைபேசி எண்: 04322-221266 / 6369029895 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், காலதாமதமாக பெறப்படும்ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *