TN School Education Department : தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 38 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளது.

பள்ளிகளில் அரசின் நலத்திட்ட உதவிகளை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் முதல் அரசின் பாடப்புத்தகங்கள், இலவச மிதிவண்டி, சீருடை, லேப்டாப்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் ஆய்வு :
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும், தொகுதி வாரியாக மானவர்களின் கல்வி கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலம், மாவட்ட கல்வி அலுவலம், வட்டார கல்வி அலுவலகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 

எண்ணிக்கையை அதிகரித்து மோசடி :
இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பதிவிட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரையும் சஸ்பெண்ட செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டார்.

அதே போன்று, விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளின் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் :
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் முறைகேடுகளை கண்டறியவும், செயல்பாடுகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் ஆகியவரக்ள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், மாணவர்களின் பதிவு, நலத்திட்ட உதவிகள் சரியாக மாணவர்களுக்கு சென்றடைகிறதா, பள்ளியின் செயல்பாடுகள், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்டவை குறித்து அந்தந்த மாவட்டத்தி

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *