பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.


இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் Round of 16 சுற்றில் இந்திய வீரர்கள் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்போட்டி இன்று மாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் வெற்றி பெறும் ஒருவர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நன்றி maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *