திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டைமண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் இணைந்து எங்களுக்காக வாழும் உங்களுக்காக என்கின்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கம் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் சேர்மன் பிரதீபா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவிற்கு வாழ்த்துரை வழங்க ரோட்டரி சங்கம் மாநில செயலாளர் மின்னல் சரவணன் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அரசு மற்றும் அரசு சாரா மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து சேர்ந்த 25 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த கல்லூரி காண விருதை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து சங்க தலைவர்களும் செயலாளர்களும் உறுப்பினர்களும் மற்றும் ஜோசப் கண் மருத்துவமணையின் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *