2வது முறையாக ட்ரம்ப் அருகே வந்த மரணம்? – ஜோ பைடன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை அமெரிக்காவில் தனது கோல்ஃப் கிளப்பில் இருந்த ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை என அமெரிக்க அதிபர் பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பென்சில்வேனியா மாகாணத்தில் ஒருமுறை ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ட்ரம்ப் காதில் குண்டு பாய்ந்தது. நல்வாய்ப்பாக ட்ரம்ப் உயிர் தப்பினார். இந்த சூழலில் மீண்டும் புளோரிடாவில் தனது கோல்ஃப் கிளப்பில் இருந்த ட்ரம்ப் மீது சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ட்ரம்ப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கோ அல்லது வன்முறைகளுக்கோ ஒருபோதும் இடமில்லை என்றும், ட்ரம்ப் காயமடையவில்லை என்பதைக் கேட்டு நிம்மதி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், என்ன நடந்தது என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *