chennai airport

சென்னை ஏர்போர்ட்டில் அதிரடி மாற்றம்… இனி தப்பவே முடியாது? சென்னை விமான நிலையத்தில் கடத்தலை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்களை கண்டுபிடிக்க, சுங்கத்துறையின் உளவுப்பிரிவு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச விமான நிலைய முனையத்தில் உள்ள பிரிவுக்கு கூடுதலாக துணை மற்றும் உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2 துணை ஆணையர்கள் மற்றும் ஒரு உதவி ஆணையர் ஆகிய 3 பேர், பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் கடத்தலை கண்டுபிடிக்க, சுங்கத்துறையின் மோப்ப நாய்களை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். ஆண்களுக்கு சமமாக பெண் பயணிகளும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதால், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் பெண் சுங்க அதிகாரிகள், 3 உதவி ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நன்றி Thanthi TV 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *