Job News| விருதுநகர் சுற்றுச்சூழல், கால மாற்றத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல், கால மாற்றத்துறை அலுவலகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் எனப்படும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இது பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல், கால மாற்றத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தற்காலிக பணி என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதன் பணி காலம் பத்து மாதங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாத ஊதியமாக 20,000 வழங்கப்பட உள்ள நிலையில், பட்டப்படிப்பு உடன் தட்டச்சு பயிற்சி முடித்த 25 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை climatechangemission.vnr@gmail.com அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *